ரம்புக்கனையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவை செயற்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவினால் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
ரம்புக்கனையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கேகாலை நீதவான் நீதிமன்றத்தினால் பொலிஸ் மா அதிபருக்கு நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன், குறித்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கேகாலை நீதவான் நீதிமன்றத்தினால் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டது.