follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடு30 மாதங்களில் நாட்டை வங்குரோத்தாக்கியது ராஜபக்ச குடும்பம்

30 மாதங்களில் நாட்டை வங்குரோத்தாக்கியது ராஜபக்ச குடும்பம்

Published on

30 மாதங்களுக்குள் ராஜபக்ச குடும்பம் நமது நாட்டை வக்குரோத்து அடைந்த நாடாக மாற்றிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்நாட்டின் தேசிய வளங்கள், தேசிய சொத்துக்கள், தேசிய நிதி என்பவற்றை திருட்டுத்தனமாக கொள்ளையடித்ததன் காரணமாகவே நாடு இவ்வளவு வக்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊழலையும் திருட்டையும் கட்டுப்படுத்தும் முகமாக சுதந்திரமான சக்தி வாய்ந்த ஒரு நிறுவன கட்டமைப்பை ஸ்தாபிப்பதாகவும், அதை எந்த வகையிலும் மாற்ற முடியாதவாறு நிரந்தர நிறுவனமாக அதிகாரமளிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் அமையப்பெறும் ஓரு அரசாங்கத்தின் கீழ் திருடர்களை பிடிக்கும் பொறுப்பு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கே வழங்கப்படும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், எக்காரணத்தைக் கொண்டும் இந்நிலைப்பாடு மாறாது எனவும் அவர் தெரிவித்தார்.

மக்களின் பணத்தை திருடிய குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தண்டிக்கும் பொறுப்பு சார் அதிகாரம், முப்பது வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த சரத் பொன்சேகாவிடம் கையளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

வேறு எவருடனும் ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்த டீலும் இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களுடனயே தனக்கு டீல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அடக்குமுறை மிக்க கொடுங்கோல் அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த “சுதந்திரத்திற்கான போராட்டம்” ஐக்கிய சக்தி பாத யாத்திரையின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் தலைமையில் இன்று(28) கலிகமுவ நகரில் ஆரம்பமாகியது.இந்த பாத யாத்திரையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...