கெரவலபிட்டி மற்றும் முத்துரஜவெல ஆகிய எரிவாயு முனையங்களில் இருந்து எரிவாயு விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
7,200 மெற்றிக் டொன் எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் இந்த வாரத்திற்குள் இலங்கையை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று (26) 3,600 மெட்ரிக் தொன் எரிவாயு மேலும் 3,600 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாளை(27) நாட்டை வந்தடையவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
குறித்த எரிவாயு கையிருப்பு நாளை முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படுமென லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.