இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியதின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து சர்வதேச நாணய நிதியதுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள நிதி அமைச்சர் தலைமையிலான குழு வொஸிங்டனுக்கு சென்றிருந்தபோது பல்வேறு விடயங்கள் தொடர்பல் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவாலுக்கு தீர்வு காண்பதற்கான மூலோபாய உத்திகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.