உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள மிகப் பெரிய நகரமான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “உக்ரைனிடமிருந்து மரியுபோலை விடுவித்துவிட்டோம். வீரர்களுக்கு பாராட்டுகள். மரியுபோலின் மிகப் பெரிய இரும்பு ஆலையைக் கைப்பற்றுங்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும், அசோவ் கடற்கரையில் உள்ள மரியுபோலில் இப்போது வெறும் 1000 உக்ரைனிய வீரர்கள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் அங்குள்ள மிகப் பெரிய இரும்பு ஆலையில் தஞ்சமடைந்திருப்பதாகவும் ரஷ்யப் படைகள் தெரிவித்துள்ளன.
முதலில், அந்த ஆலையை தகர்க்க உத்தரவு வந்ததாகவும், ஆனால் தற்போது அதிபர் புதின் ஆலையை சுற்றிவளைத்து ஈ கூட வெளியே செல்லாத வகையில் சீல் வைக்கச் சொல்லியிருப்பதாக ரஷ்ய படைகளின் கிழக்கு கமாண்டர் தெரிவித்துள்ளார்.