follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுரம்புக்கனையில் சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் மரணத்திற்கு நியாயம் கோரும் மகள்!

ரம்புக்கனையில் சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் மரணத்திற்கு நியாயம் கோரும் மகள்!

Published on

ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் மகள் நீதி கோரி கோரிக்கை விடுத்துள்ளார்.

42 வயதான கே.டி.லக்ஷான், செவ்வாய்க்கிழமை (19) எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரின் மகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தனது தந்தை போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும், தனது மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளை வாங்க சென்றதாகவும் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் இருந்து விலகி நிற்கும் போது தனது தந்தை பொலிஸாரால் சுடப்பட்டதை மற்றொரு நபர் பார்த்ததாக அவர் மேலும் கூறினார்.

தனக்கு எந்த நிதியுதவியும் தேவையில்லை என்று கூறிய அவரின் மகள், தன் தந்தைக்கு நியாயம் வேண்டும் எனக் குறிப்பிடுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...