போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை செலுத்துவதற்கு எதிர்வரும் ஏப்ரல் 23 ஆம் திகதி வரை சலுகைக் காலம் வழங்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் 215 (அ) பிரிவின் பிரகாரம், நிதியமைச்சின் செயலாளரின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, இந்த அபராதங்களை செலுத்துவதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
அதன்படி, மார்ச் 29 முதல் ஏப்ரல் 10 வரை (விடுமுறை நாட்கள் உட்பட) வழங்கப்பட்ட அபராத பத்திரங்களை இம்மாதம் 23 ஆம் திகதி வரை எந்த தபால் அலுவலகம் அல்லது உப தபால் நிலையங்களில் மேலதிக கட்டணமின்றி செலுத்தலாம் என்று தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.