நாடு முழுவதும் மக்கள் அமைதியான போராட்டங்களிலும்,ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுவரும் நிலையில், இதற்கிடையே அரசாங்க சார்பு கூட்டாளிகள், தரகர்கள் மற்றும் அரச பயங்கரவாதிகளை உட்புகுத்திகலவரத்தை உருவாக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அரச பயங்கரவாதம் மக்கள் போராட்டத்தில் கை வைத்து துன்புறுத்தினால் அவர்களைப் பாதுகாக்க ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து அவர்களைப் பாதுகாக்கும் முகமாக அந்த இடங்களுக்குச் செல்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.