follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுஅத்தியாவசிய மருந்துகள் சில கையிருப்பில் இல்லை

அத்தியாவசிய மருந்துகள் சில கையிருப்பில் இல்லை

Published on

அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக சில மருத்துவமனைகள் திட்டமிடப்பட்ட அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் இல்லாத மருந்துகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.

அந்த வகையில் 646 அத்தியாவசிய மருந்துகளில் 37 மருந்துகள் தற்போது கையிருப்பில் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

அடுத்த மூன்று மாதங்களுக்கு சில மருந்துகளுக்கு பாரியளவில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, மருந்து தட்டுப்பாட்டினால் இலங்கை வைத்தியசாலைகளில் மரணங்கள் எதுவும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...