பாகிஸ்தானில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி அல்லது இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேர்ச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் பெரும்பாலான நேரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு நீண்ட காலமாக திரவ இயற்கை எரிவாயு(எல் என் ஜி) விநியோகித்து வரும் பல ஏற்றுமதியாளர்கள் கடந்த சில மாதங்களாக எரிவாயு ஏற்றுமதியை ரத்து செய்துள்ளனர்.
இதன்காரணமாக சந்தைகளில் புதிதாக எரிவாயு வாங்க அந்நாட்டு அரசு 6 டெண்டர்களை வெளியிட்டுள்ளது. ஆனால் அது முழுமையாக வழங்கப்பட்டால் அரசாங்கத்திற்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் செலவாகும்.
ஏற்கெனவே நிலவும் கடுமையான பொருளாதார சூழலில், மின்வெட்டு பிரச்சினை மேலும் சிக்கலை அதிகரித்துள்ளது.