follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1பஸ் கட்டணம் மீண்டும் அதிகரிப்பு

பஸ் கட்டணம் மீண்டும் அதிகரிப்பு

Published on

பஸ் கட்டணத்தை 35 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

அதற்கமைய, ஆகக்குறைந்த பஸ் கட்டணமாக 27 ரூபா அறவிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும், லங்கா ஐஓசி நிறுவனமும் மீண்டும் எரிபொருள் விலையை அதிகரித்தமையே இவ்வாறு பஸ் கட்டண உயர்வுக்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தனியார் பஸ்களின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களின் கட்டணங்களும் அதிகரிக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...