follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுதான் உள்ளிட்ட 40 சுயாதீன எம்.பிக்கள் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துள்ளோம் - மைத்திரிபால சிறிசேன

தான் உள்ளிட்ட 40 சுயாதீன எம்.பிக்கள் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துள்ளோம் – மைத்திரிபால சிறிசேன

Published on

அரசாங்கத்தில் இருந்து விலகிய 40 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்துகொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் தாம் உள்ளிட்ட 40 பேர் எதிர்க்கட்சித் தலைவரின் குழுவல்ல என்றும் எதிர்க்கட்சியில் சுயேட்சைக் குழுவாகச் செயற்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் பல காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

புதிய அமைச்சரவையை நியமிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என தான் நம்பவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் உட்பட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும், போராட்டம் நியாயமானது என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...