தற்போதைய நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வாக அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் சில திருத்தங்களுடன் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தான் நம்புவதாக பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்திற்கு முழுமையான அதிகாரத்தினை கொண்டுவருவதற்கான 19 ஆவது திருத்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய அரசியல் திருத்தமொன்றை விரைவில் அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதியின் ஒத்துழைப்புடன் முழுமையான அரசியலமைப்பு திருத்தமொன்றை விரைவில் நாட்டுக்கு கொண்டுவருவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.