follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுபஸ்களுக்கு தீ வைத்த நபரை கைது செய்ய நடவடிக்கை

பஸ்களுக்கு தீ வைத்த நபரை கைது செய்ய நடவடிக்கை

Published on

மிரிஹான எதிர்ப்பு நடவடிக்கையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் ஒன்லைன் கண்காணிப்பு மூலம் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மிரிஹான பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இரண்டு பஸ்கள் எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சம்பவத்தின் போது கிடைத்த CCTV காட்சிகளின் அடிப்படையில் , பஸ்ஸிற்கு தீ வைத்த நபரின் உருவத்தை ஒத்த ஒரு நிழற்படம் வரையப்பட்டுள்ளது.

இதனூடாக சந்தேகநபரை கைது செய்வதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.

மிரிஹான, பரணகொட்டாவ வீதி, பெங்கிரிவத்த சந்தியில் அமைதியின்மையுடன் செயற்பட்டு, பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததுடன், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களுக்கும் ஏனைய வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...