follow the truth

follow the truth

September, 10, 2024
Homeஉள்நாடுமத்திய வங்கி சுயாதீனமாக செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்

மத்திய வங்கி சுயாதீனமாக செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்

Published on

மத்திய வங்கி சுயாதீனமாக செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து இதனூடாக தீர்வு காண முடியும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை திட்டவட்டமான திசையில் வழிநடத்தும் ஆற்றலும் பலமும் இலங்கை மத்திய வங்கிக்கு இருப்பதாக தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த சில மாதங்களில் திருப்புமுனையை எட்ட முடியும். அதற்கு அரசியல் ஸ்திரத்தன்மையும் சமூக ஸ்திரத்தன்மையும் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தான் நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காகவே வருகை தந்துள்ளதாகவும் அரசியல்வாதிகளுக்கு சேவை செய்ய தான் வருகை தரவில்லை எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன உரிமையாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக விளம்பரப்படுத்தும் ஸ்டிக்கர்களை வாகனங்களில் காட்சிப்படுத்தக் கூடாது என வாகன சாரதிகளுக்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு...

16,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் கடுமையாக பாதிப்பு

சுமார் 16000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகளின் போசாக்கின்மை நிலைமையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட...

நீதிமன்ற தீர்வு கிடைக்கும் வரை, on arrival visa முறை அமுலில்

விசா பிரச்சினைக்கு நீதிமன்ற தீர்வு கிடைக்கும் வரை, வருகை விசா (on arrival visa) வழங்கும் முறை அமுல்படுத்தப்படும்...