follow the truth

follow the truth

April, 11, 2025
Homeஉள்நாடுஇரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேற்றம்!

இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளியேற்றம்!

Published on

நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்விலிருந்து இரு  எம்.பி.க்களை  வெளியேற்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நடவடிக்கை எடுத்துள்ளாா்.

குறித்த இரு எம்.பிக்களையும் சபையிலிருந்து  வெளியேற்றுவதற்கென  நாடாளுமன்ற அமர்வு மீண்டும் சிறிது நேரத்துக்கு  இடைநிறுத்தப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி ஆகிய இருவருமே இவ்வாறு சபையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனா்.

நாடாளுமன்ற அமர்வை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவால் அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து, மீண்டும் சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டபோது சபாநாயகர் இந்த முடிவை அறிவித்தாா்.

சபை அமர்வுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமையின் காரணமாகவே இவர்கள் இருவரும் வெளியேற்றப்படுவதாக சபாநாயகர் சபையில் அறிவித்தாா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு...

தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை

சுற்றுலாக் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாப்...

இராஜகிரியவில் 22 இந்திய பிரஜைகள் கைது

காலாவதியான விசாக்களுடன் இருந்த 22 இந்திய பிரஜைகள் இன்று(10) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள்...