follow the truth

follow the truth

March, 14, 2025
Homeஉள்நாடுகட்டுநாயக்க விமான நிலையத்திலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு; ஊழியர்களை வீடுகளிலிருந்து பணியாற்றுமாறு அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்திலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு; ஊழியர்களை வீடுகளிலிருந்து பணியாற்றுமாறு அறிவிப்பு

Published on

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்களை இன்று(07) முதல் வீடுகளிலிருந்து பணி புரியுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஊழியர்களின் போக்குவரத்துக்கு தேவையான எரிபொருள் இன்மையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரச பையின் உப தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்தார்.

அதனடிப்படையில், அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விமான நிலையத்திற்கு தேவையான எரிபொருளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை என ரஜீவ் சூரியாராச்சி கூறினார்.

எவ்வாறாயினும், விமான நிலையத்தின் ரேடார் (Radar) கட்டமைப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான எரிசக்தியை இடையூறியின்றி பெற்றுக்கொள்ள முடிவதாக அதன் உப தலைவர் தெரிவித்தார்

இதனிடையே, விமானங்களுக்கான எரிபொருள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தானத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரவு நேர பணிகளில் இருந்து விலகும் கிராம உத்தியோகத்தர்கள்

பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இன்று (14) முதல் அனைத்து பெண் கிராம உத்தியோகத்தர்களும் இரவு நேர சேவைகளிலிருந்து...

வெல்லவாய மற்றும் எல்ல நோக்கி செல்லும் வாகனங்களுக்கான விசேட அறிவித்தல்

சீரற்ற வானிலை காரணமாக, எல்ல - வெல்லவாய வீதியின் 12வது கிலோமீட்டர் கம்பத்திற்கு அருகிலுள்ள பகுதியில் வீதி தடைப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்...