கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிகள் மற்றும் உயரதிகாரிகள் வெளியேறுவது தொடர்பில் சமூக ஊடகங்களில் பொய்யான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தைப் பயன்படுத்தும் உயரடுக்கினர் முதல் சாதாரண பயணிகளின் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.
எவ்வாறாயினும், விமான நிலையத்தின் பாதுகாப்பு கெமரா அமைப்புகளில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை எனவும் தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் எந்தவொரு பாதுகாப்பு நடைமுறைகளையும் செயலிழக்கச் செய்தல் அல்லது தளர்த்துவதோ இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.