follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகூட்டணியின் பிற்போடப்பட்ட போராட்டம் நாளை இடம்பெறும்!

கூட்டணியின் பிற்போடப்பட்ட போராட்டம் நாளை இடம்பெறும்!

Published on

ஊரடங்கு சட்டம் காரணமாக, பிற்போடப்பட்ட அரச எதிர்ப்பு போராட்டத்தை நாளைய தினம் தலவாக்கலை நகரில் நடத்த உள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.

கடந்த 3ஆம் திகதி தலவாக்கலை நகரில் தமிழ் முற்போக்கு கூட்டணி அரச எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டிருந்த நிலையில், ஊரங்கு சட்டம் காரணமாக, அது பிற்போடப்பட்டது.

இந்த நிலையில், நாளைய தினம் குறித்த போராட்டத்தை நடத்த உள்ளதாக, எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவரான, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டத்தில், கட்சி, தொழிற்சங்க பேதமின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும், எதிர்வரும் 7ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான, நாடாளுமன்ற உறப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...