follow the truth

follow the truth

April, 9, 2025
HomeUncategorizedஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்:பொலிஸாருடன் வாக்குவாதம் (VIDEO)

ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்:பொலிஸாருடன் வாக்குவாதம் (VIDEO)

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த செல்ல முயற்சித்த போது, பொலிஸார் தடைகளை ஏற்படுத்தி அவர்களை தடுத்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதாச உட்பட எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுதந்திரத்தின் தந்தையான டி.எஸ்.சேனாாநாயக்கவிடம் மக்களின் குறைகளை எடுத்து கூற அனுமதி வழங்குமாறு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பொலிஸாரிடம் கூறினர்.

இதில் சம்பிக்க ரணவக்க. ராஜித சேனாரத்ன, மனோ கணேசன், கபீர் ஹாசிம், மனுஷ நாணயக்கார, எஸ்.எம். மரிக்கார் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசார்ட் பதியூதீன், முஜிபுர் ரஹ்மான் உட்பட பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.

சுதந்திர போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு செல்ல பொலிஸார் அனுமதி மறுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன் மக்களின் எதிர்ப்பு கண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அச்சம் கொண்டுள்ளதால், அதனை தடுக்க முயற்சித்து வருவதாகவும் ஆண்டவனே வந்தாலும் மக்களின் எழுச்சியை தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோட்டா கோ ஹோம் என்றும் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனியவளக் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு புதுவருடக் கொடுப்பனவுகள்

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பங்களாதேஷிற்கு மசகு எண்ணெய்யை ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. மசகு எண்ணெய் உற்பத்தி...

முதல் முறையாக சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக பெண் ஒருவர் தெரிவு

சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக சிம்பாப்வேயின் விளையாட்டுத்துறை அமைச்சர் கிறிஸ்டி கோவென்ட்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 41 வயதான அவர் இந்தப்...

வேட்புமனு தாக்கலின் பின்பு ஊர்வலம், வாகனப் பேரணி நடத்த அனுமதியில்லை

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் பணிகள் மார்ச் 17 ஆம் திகதி காலை...