இன்றைய தினம் (31) வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிக வெப்ப நிலைமை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் செயற்பட வேண்டிய விதம்:
வேலைத் தளத்தில்: தேவையான அளவில் நீரை பருகவும். முடியுமான வரை நிழல் உள்ள இடங்களில் ஓய்வெடுங்கள்.
வீட்டில்: வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அவதானம் செலுத்துங்கள்
வாகனங்களில்: சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்லாதீர்கள்
வெட்ட வெளியில்: அதிகளவில் களைப்படையும் செயற்பாடுகளை குறைத்துக்கொள்ளுங்கள். நிழல் உள்ள இடங்களை நாடுங்கள். தேவைக்கேற்ப நீரை பருகுங்கள்.
ஆடை: இலகுரக மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுங்கள்.