உக்ரேன் ஜானதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி நாளை அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் காணொளி காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளதாக, அவுஸ்திரேலிய வேலைவாய்ப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
“போருக்கான எந்தவித காரணமும் இல்லாமல் உக்ரேன் மீது படையெடுப்பை தொடங்கிய ரஷ்யாவுக்கு எதிராக அசாத்திய தைரியத்தையும் உறுதியையும் உக்ரேன் வெளிப்படுத்துகிறது,” என அவர் தெரிவித்துள்ளார்..
ஐ.நா., மற்றும் அமெரிக்க பாராளுமன்றம் முதல் ஜப்பான் நாடாளுமன்றம் வரையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் தலைவர்களின் கூட்டங்களில் உக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி தொடர்ந்து உரையாற்றி வருகிறார்.