11 கட்சிகள் அடங்கிய குழு கொழும்பில் தனது மே தின பேரணியை நடத்த தீர்மானித்துள்ளது.
இதன்படி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமலின் கட்சி, உதய கம்மன்பிலவின் கட்சி உட்பட 11 கட்சிகள் இணைந்து , அரசுக்கு எதிராக கொழும்பில் மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளன.
அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட ஏனைய கட்சிகளை இதில் கலந்து கொள்ளுமாறு 11 கட்சிகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.