பிம்ஸ்டெக் எனப்படும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் அரச தலைவர்கள் மாநாடு இன்று(30) இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று முற்பகல் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மெய்நிகர் ஊடாக மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நேரில் பங்கேற்றிருந்த நிலையில் மியன்மார் வெளியுறவு அமைச்சர் இணையவழியில் பங்கேற்றார்
இலங்கையில் பிம்ஸ்டெக் மாநாட்டை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய உறுப்ப நாடுகளுக்கு வெளிவிவகார அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்