நேற்று(29) நள்ளிரவு முதல் முன்னெடுத்த தொழிற்சங்க போராட்டத்தை ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
ரயில் கட்டணம் சீராக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்வைத்து தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்தனர்
இன்று முதல் மேலதிக நேர சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடாங்கொட நேற்று தெரிவித்திருந்தார்.
போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து, குறித்த தொழிற்சங்க போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.