follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுஓய்வுபெற வேண்டிய தேவை எனக்கில்லை : அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறுவோம்

ஓய்வுபெற வேண்டிய தேவை எனக்கில்லை : அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறுவோம்

Published on

பதவிக்காலம் முடியும் வரை தான் நாட்டின் பிரதமராக நீடிப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் தான் உடனே ஓய்வு பெறப்போவதில்லை எனவும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக தேசிய அரசாங்கம் மற்றும் பிரதமர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவது போன்ற விடயங்கள் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மகிந்த இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் பிரச்சினைகள் இருந்த போதிலும், அவற்றை விரைவில் தீர்க்க அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை.

எனது பதவிக்காலம் முடியும் வரை நான் நாட்டின் பிரதமராக நீடிப்பேன். அடுத்த தேர்தலுக்குப் பிறகும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

எனக்கு இன்னும் சிறிது காலம் இருக்கிறது. உடனே ஓய்வு பெற மாட்டேன். தேசிய அரசாங்கம் தொடர்பில் வெளியாகும் ஊகங்கள் அனைத்தும் வதந்தி.

தற்போதைய நெருக்கடிகளான பொருளாதாரம், மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் அனைத்தையும் அரசாங்கம் விரைவில் தீர்க்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...