follow the truth

follow the truth

April, 14, 2025
Homeஉள்நாடுஜனாதிபதி, பிரதமரின் பயணங்களில் மாற்றம் இல்லை - விமானப்படை

ஜனாதிபதி, பிரதமரின் பயணங்களில் மாற்றம் இல்லை – விமானப்படை

Published on

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு விமான வசதிகள் வழங்குவதை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை விமானப்படை தீர்மானித்துள்ளது.

எனினும்  ஜனாதிபதி மற்றும் பிரதமரின்  பயணங்கள் தொடர்பில் இந்த மட்டுப்படுத்தல்கள் முன்னெடுக்கப்படமாட்டாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க இதனை தெரிவித்தார்.

பிரதானமாக  நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டும் அதனுடன் இணைந்ததாக  கொரோனா நிலைமையினை கருத்தில் கொண்டும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறூப் கெப்டன்  துஷான் விஜேசிங்க குறிப்பிட்டார்.

அதன்படி, இனிமேல்  அத்தியாவசிய தேவைக்காக மட்டும் , பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மாத்திரமே விமான சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க  சுட்டிக்காட்டினார்.

தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு, அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் முகாமைத்துவம் செய்யப்படுவதாக சுட்டிக்காட்டும்  விமானப்படை பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க,  அமைச்சகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விமான வசதிகள் மட்டுமன்றி,  வான்வழி கண்காணிப்பு கடமைகள் மற்றும் விமானி பயிற்சி நடவடிக்கைகளைக் கூட இனி மேல் கூட்டாக மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கெப் மற்றும் லொறி மீது பேருந்து மோதி கோர விபத்து – ஒருவர் பலி

அக்போபுர பொலிஸ் பிரிவின் கந்தளாய் - திருகோணமலை வீதியில் 85 ஆம் தூண் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில்...

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் விசேட அறிவித்தல்

கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் நாளை(15) முதல் ஏப்ரல் 17 வரை வரையறுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும்...

சர்வதேச பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்வு

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் பல வரிகளை நீக்கியதையடுத்து சர்வதேச பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்ந்துள்ளன. இதன்படி ஜப்பானின்...