follow the truth

follow the truth

October, 4, 2024
Homeஉள்நாடுஇந்திய வெளிவிவகார அமைச்சரை சந்திக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்திக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Published on

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து கலந்துரையாடவுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளார்.

எதிர்வரும் 30 ஆம் திகதிவரை அவரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

நாளை இலங்கை வரவுள்ள அவர், நாளைமறுதினம் கொழும்பில் இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை (28) பிற்பகல் அவரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அதன் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன் நாளைய தினம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளும் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி – கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள்...

IMF இலக்குகளை அடைவதற்கும் மக்கள் மீதான சுமைகளை குறைக்கவும் மாற்றுத் தீர்வுகள் குறித்து கவனம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீநிவாசன், சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீற்றர்...

நாளை இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்....