follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படவுள்ள பொது இடங்கள் விரைவில் அறிவிப்பு

கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படவுள்ள பொது இடங்கள் விரைவில் அறிவிப்பு

Published on

முழுமையான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டை கட்டாயமாக்கப்படவுள்ள பொது இடங்கள் தொடர்பான பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

எதிர்வரும் நாட்களில் குறித்த பட்டியல் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் இதுவரையில் 14.4 மில்லியன் மக்கள் முதல் இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

எனினும் அவர்களில் 7.7 மில்லியன் மக்களே பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக அடுத்த 2 வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட பொது இடங்களுக்கு செல்லும் போது குறித்த தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படவுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அவ்வாறான பொது இடங்கள் தொடர்பான பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

இதற்கமைய ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு பின்னர் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் மாத்திரமே இவ்வாறான பொது இடங்களுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

20 வயதுக்கு மேற்பட்டோர் மூன்று தடுப்பூசிகளையும் பெற்றிருந்தால் மாத்திரமே அது முழுமையான தடுப்பூசியான கணக்கில் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...