கால்நடைத் தீவனப் பொருட்களின் விலை அதிகரிப்பால் எதிர்காலத்தில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கலாம் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய டொலர் நெருக்கடி உள்ளிட்ட பொருளாதார காரணிகளால் தமது வர்த்தக சமூகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.