அமைச்சரவை இணக்கம் தெரிவித்தால் புதிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க எதிர்ப்பார்த்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிகள் முன்வைத்த இந்த புதிய வரவு செலவுத் திட்ட யோசனையை ஏற்றுக்கொள்வதாகவும் நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டின் போது புதிய வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மக்களுக்கு பல நிவாரணங்களை வழங்கவும் எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.