follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉள்நாடுவாடகை வீடுகளில் வசிப்போருக்காக வீடமைப்பு திட்டம்

வாடகை வீடுகளில் வசிப்போருக்காக வீடமைப்பு திட்டம்

Published on

குறைந்த வருமானம் கொண்ட வாடகை வீடுகளில் வசிப்போருக்காக வீடமைப்பு திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கென அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

காணிகள் மற்றும் வீடு இன்றி குறைந்த வசதியுடன் வாழும் வாடகை வீட்டிலுள்ளவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாண கட்டிட மூலப்பொருட்கள் தொழிற்துறை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் ஊடாக குறித்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

4 அடுக்குகளை கொண்டதான தொடர்மாடி வீடமைப்பு திட்டத்தின் ஊடாக முதற்கட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதோடு, மாகாண மட்டத்தில் 464 வீடுகளை கொண்ட 9 தொடர்மாடி குடியிருப்புக்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு அடிப்படை கொடுப்பணவு செலுத்த முடியா பட்சத்தில் மாதந்தம் 15 ஆயிரம் ரூபா எனும் அடிப்படையில் 31 வருடங்களுக்கு அதனை செலுத்தக்கூடிய வகையில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

2வது அல்லது 3ம் தலைமுறையினருக்கு வீட்டின் உரிமையை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும் எந்தவொரு காரணத்திற்காகவும் வீட்டை விற்பனை செய்ய முடியாத வகையிலும் பயனாளர்களிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் முன்வைத்த கோரிக்கைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

வாக்களிக்கச் செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபை விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச்...