follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉள்நாடுபாதுகாக்கப்படாத காடுகள் தொடர்பில் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

பாதுகாக்கப்படாத காடுகள் தொடர்பில் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

Published on

பாதுகாக்கப்படாத காடுகளை பிரதேச செயலாளரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வகையில் வௌியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய செயற்பட வேண்டாம் என காணி ஆணையாளர் நாயகத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கையை சவாலுக்கு உட்படுத்தி, சுற்றுச்சூழல் கேந்திரம் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

குறித்த சுற்றுநிருபத்தை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு தொடர்பில் விடயங்களை முன்வைக்க எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி மன்றில் ஆஜராகுமாறு காணி ஆணையாளர் நாயகம், வன பாதுகாப்பு ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட 5 பேருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று (22) பிறப்பிக்கப்பட்ட உத்தரவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வன பாதுகாப்பு ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட 5 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

வாக்களிக்கச் செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபை விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச்...