6 மில்லியன் டொலர் இந்திய நிதி உதவியின் கீழ், சமுத்திர மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, இலங்கை மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு இடையில் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திடவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.