பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்குரிய தேசிய கொள்கைக்கான அவசியம் குறித்து மல்வத்து, அஸ்கிரி பீடங்களினால் ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
நிலையான அபிவிருத்தி மற்றும் 13 விடயப்பரப்புகளில் அஸ்கிரிய மற்றும் மல்வத்தை மகாநாயக்கர்கள் ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.