follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉள்நாடுஇலங்கை தூதரகங்ககள் மூடப்பட்டமை குறித்து வெளிவிவகார அமைச்சு

இலங்கை தூதரகங்ககள் மூடப்பட்டமை குறித்து வெளிவிவகார அமைச்சு

Published on

சில நாடுகளில் இலங்கை தூதரக அலுவலகம் மற்றும் கொன்சியுலர் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளமை தற்காலிக ஏற்பாட்டின் அடிப்படையிலாகும் என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு வருட காலப்பகுதிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களை மீண்டும் திறப்பது தொடர்பாக கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிதி நிலைமையின் காரணமாக சிட்னி கொன்சியுலர் அலுவலகம் , ஈராக்கில் பாக்தாத் மற்றும் சுவிடனில் உள்ள தூதரக அலுவலகம் ஆகியவற்றை மூட வேண்டி ஏற்பட்டதாகவும் கூறினார்.

நாட்டின் பொருளாதார நிலைமையை அடிக்கடி கவனத்தில் கொண்டு இந்த அலுவலகம் குறித்து நடவடிக்கை மேற்கொள்வோம் எனவும் நாட்டின் நிதி நிலைமைய சீராகும் வரையில் தற்காலிக நடவடிக்கையாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளபம்டுள்ளதாக பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் முக்கிய அறிவித்தல் ஒன்று...

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

வாக்களிக்கச் செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபை விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச்...