follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுகொட்டாஞ்சேனை - ப்ளூமெண்டல் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து : மூவர் காயம்

கொட்டாஞ்சேனை – ப்ளூமெண்டல் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து : மூவர் காயம்

Published on

கொட்டாஞ்சேனை – ப்ளுமெண்டல் தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதியின் வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் பெண் ஒருவர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை – ப்ளுமெண்டல் தொடர்மாடிக் குடியிருப்பு தொகுதியில் உள்ள 3ஆம் தளத்தில் உள்ள வீடொன்றில், நேற்று மாலை தீப்பரவல் ஏற்பட்டது.

அதனை கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபையின் 5 தீயணைப்பு வாகனங்கள், ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

குறித்த வீட்டில் இருந்த பெண் சமயலறையில் அடுப்பை பற்ற வைத்த போது, அவரது மகன் மோட்டார் சைக்களுக்காக கொள்வனவு செய்திருந்த பெற்றோல் கலனை எடுத்துள்ளார்.

இதன்போது, குறித்த கலன் தவறி, அதிலிருந்த பெற்றோல் சிதறிய நிலையில், இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தம்மை காப்பாற்றும் நோக்கில், குறித்த பெண் தொடர் மாடிக்குடியிருப்பின் 3ஆம் தளத்திலிருந்து கீழே பாய்ந்த நிலையில், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருடன் மேலும் 2 பேர் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எல்பிட்டியவில் தபால் மூல வாக்குகளை குறிக்கும் மேலதிக நாள் இன்றாகும்

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் மேலதிக நாள் இன்று (18) செயற்படுகின்றது. கடந்த 14ஆம்...

பொதுத் தேர்தல் வேட்பாளர்களுக்கான விசேட அறிவிப்பு

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது செலவு மற்றும் வருமானப் பதிவேடுகளைப் பேணுவதற்கு தனி நபரை நியமிப்பது பொருத்தமானது...

HPV தடுப்பூசி செலுத்திய 05 மாணவிகள் வைத்தியசாலையில்

களுத்துறை - அங்குருவத்தோட்ட பகுதியில் HPV தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்த 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5...