ஒரு கப் பால் தேநீரின் விலை 100 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலை காரணமாக சில உணவகங்களில் பால் தேநீர் விநியோகமும் இடைநிறுத்தப்பட உள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உள்ளூர் பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என கால்நடை வளங்கள் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், உள்ளூர் பால்மா உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.