follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகடந்த அரசாங்கத்தின் காலத்தில் கலாசார நிதியத்தின் நோக்கங்களுக்குப் புறம்பாக பணம் செலவழிக்கப்பட்டுள்ளது

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கலாசார நிதியத்தின் நோக்கங்களுக்குப் புறம்பாக பணம் செலவழிக்கப்பட்டுள்ளது

Published on

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கலாசார நிதியத்தின் நோக்கங்களுக்குப் புறம்பாக அந்த நிதியத்தின் பணத்தை பயன்படுத்தியதன் காரணமாக கலாசார நிதியத்தின் அடிப்படைப் பணிகளுக்கு நிதி இல்லை என தேசிய மரபுரிமைகள், அரங்கு கலை மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

“ஒரே நாடு, ஒரே சட்டத்துக்கான” ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்கள் அண்மையில் தேசிய மரபுரிமைகள், அரங்கு கலை மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க​வை சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேசிய பாரம்பரியம் மற்றும் தொல்பொருள்களை பாதுகாப்பது தொடர்பான சட்டம், அனைத்து இன மக்களுக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் பல்வேறு மாகாணங்களில் உள்ள பொதுமக்கள் இச்செயலணிக்கு தகவல்களை வழங்கியுள்ளதாக இக்கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கருத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பாராட்டிய இராஜாங்க அமைச்சர், தொல்பொருள் சட்டத்தை அமுல்படுத்துவதற்கும், அந்த இடங்களைப் பாதுகாப்பதற்கும் போதிய நிதி ஒதுக்கீடுகள் இல்லை என்றும், இந்த நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த மத்திய கலாசார நிதியத்தின் நிலையான சேமிப்புகளில் முதலீடு செய்த 25.000 மில்லியன் ரூபாய்களை கடந்த அரசாங்கத்தின் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் அடிப்படை நோக்கங்களுக்குப் புறம்பாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றமை தெரிய வந்துள்ளது.

“நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி என்பது சமமாக பெற்றுக்கொள்ளப்பட வேண்டிய உரிமையாகும். அந்த பொதுக் கல்வியில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்குத் தடையாக இருக்கின்ற தீவிரவாத போதனைகள் ஊக்குவிக்கப்படக்கூடாது”. செயலணியின் உறுப்பினர்கள் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி. பெரேராவை சந்தித்தபோதே அவர் இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.

இலங்கையில் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற கருத்தினை அமுல்படுத்துவது தொடர்பில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கருத்திற்கொண்டு, அக்கருத்தியலை ஆய்வு செய்ததன் பின்னர் நாட்டில் அதனை அமுல்படுத்துவதற்காக கருத்தியல் அறிக்கையொன்றை சமர்பிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வண.கலகொடஅத்தே ஞானசார தேரரின் தலைமையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி, தற்போது நாட்டின் பல்வேறு மாகாணங்களை உள்ளடக்கிய வகையில், பொதுமக்களின் கருத்துக்களையும் நிபுணர்களின் ஆலோசனைகளையும் பெற்று வருகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...