இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பரீட்சைகளில் நடைபெற்ற முறைகேடுகள், குறிப்பாக நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இந்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக் கோரி டெல்லியில் மாணவர்கள் பல வாரங்களாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக தர்மேந்திர பிரதான் சற்றுமுன்னர் அறிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
