follow the truth

follow the truth

September, 21, 2024
Homeவிளையாட்டுஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இந்தியா

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இந்தியா

Published on

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 க்கு 0 என்ற அடிப்படையில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.

போட்டியில் 447 எனும் வெற்றியிலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன 107 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 54 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் ரவிசந்திரன் அஷ்வின் 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

முன்னதாக தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 303 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இந்த நிலையில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக இந்திய அணி 252 ஓட்டங்களையும், இலங்கை அணி 109 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டன.

இதற்கமைய இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 238 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் அணி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐ.சி.சி டி20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர்...

உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு

கடந்த சில நாட்களாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்று வந்த உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப்...

கமிந்து இலங்கை இன்னிங்ஸை காப்பாற்றினார்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், துடுப்பெடுத்தாடிய...