follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுசமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அதிகரிக்க கோரிக்கை

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அதிகரிக்க கோரிக்கை

Published on

லிட்ரோ நிறுவனமானது  சாதாரண உணவகங்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் 12.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 850 ரூபாவால் அதிகரிக்குமாறு அரசாங்கத்தை கோரியுள்ளது. 

கடன் கடிதத்தை பெறுவது, கப்பல் கட்டணம் மற்றும் டொலர் பெறுமதி உள்ளிட்ட தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலமைகளை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை லிட்ரோ நிறுவனம் அரசாங்கத்திடம் முன் வைத்துள்ளதாக அறிய முடிகிறது.

கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக சந்தைக்கு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்காத  லிட்ரோ நிறுவனம், கடன் கடிதம் வழங்கப்பட்ட பின்னர் கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்திருந்த நிலையில் நேற்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 48 மணி நேரத்தில் 2 இலட்சம்  எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகித்ததுள்ளது. 

இந்நிலையிலேயே விலை அதிகரிப்புக்கான கோரிக்கையை அந்நிறுவனம் முன் வைத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...