follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉள்நாடுஇலங்கை பொருளாதார நிலை: மத்திய வங்கி ஆளுநரின் அறிக்கை

இலங்கை பொருளாதார நிலை: மத்திய வங்கி ஆளுநரின் அறிக்கை

Published on

ரூபாவுக்கு அதிகமாக நெகிழ்வுத் தன்மையை வழங்குவதன் மூலம் குறுகிய கால பொருளாதார சிக்கல் ஏற்பட்டாலும் நிலையான பொருளாதார மொன்றை கட்டியெழுப்ப இந்த வழிமுறை பாரிய அளவில் கைகொடுக்குமென மத்திய வங்கி ஆளுநர் அஜிட்நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ரூபாவை நெகிழ்வுத் தன்மை மிக்கதாக மாற்றுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். வட்டி வீதத்தை அதிகரிக்கவும் தீர்மானித்துள்ளோம். இதன் மூலம் மக்களின் வாழ்வியலுக்கு பாதிப்பு ஏற்படுமென எமக்கு தெரியும். எனினும் நீண்டகால ஸ்த்திரதன்மையை பாதுகாக்கும் வகையிலேயே மத்திய வங்கி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜிட்நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ரூபாவின் பெறுமதியையும் பாதுகாக்க முடியும். இதன் ஊடாக நலன்புரி விடயங்கள் பலவும் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளது. அத்துடன் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் அந்நிய செலாவணியும் அதிகரிக்கலாம். இவற்றை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் இந்த தீர்மானம் காரணமாக ஏற்படும் சவால்களுக்கு மாற்று தீர்மானங்களை எடுக்கவும் மத்திய வங்கி தயாராகவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜிட்நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...