follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுநிவாரணம் வழங்க சகல முயற்சிகளையும் நாம் எடுப்போம்

நிவாரணம் வழங்க சகல முயற்சிகளையும் நாம் எடுப்போம்

Published on

மக்களுக்கு தேவையான நிவாரணங்களை விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

தம்மீது வைத்துள்ள நம்பிக்கையை தொடர்ந்தும் அவ்வாறே பேணுமாறு அமைச்சர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எமது அமைச்சர்கள் அனைத்து விதமான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா நீதவான் நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில்வழங்கும் போது அமைச்சர் பெசில் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருளுக்கான விலையை அதிகரித்ததை போன்று, ஏனைய நிறுவனங்களும் எரிபொருள் விலையை சிலவேளைகளில் அதிகரிக்கலாம்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு பிரச்சினை முடியும் போது, மற்றுமொரு பிரச்சினை உருவாகின்றது.

தற்போது உக்ரைன் – ரஷ்யா யுத்தம் ஆரம்பித்துள்ளது. நிவாரணங்களை வழங்க நாம் முழுமையாக முயற்சித்து வருகின்றோம் என அமைச்சர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...