follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉலகம்சீனாவில் மீண்டும் முழு ஊரடங்கு

சீனாவில் மீண்டும் முழு ஊரடங்கு

Published on

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் முழு ஊரடங்கை அமுல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் உள்ள சேங்சுன் நகரில் கடந்த இரண்டாண்டுகளில் இல்லாத அளவுக்கு அன்றாட கொரோனா தொற்று அதிகமாகப் பதிவாகியுள்ளது.

கொரோனா பரவல் அதிகரிக்கும் இடங்களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமுல்படுத்த உள்ளூர் நிர்வாகங்களுக்கு சீன அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைஅடுத்து பாதிப்பு கண்டறியப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள சீன அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றன.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் – இருவர் பலி

இந்தியா - கேரளாவில் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்த 2வது நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா...

மணிப்பூரில் இணைய சேவைக்குத் தடை

மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருவதால் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இணைய சேவை தடை...

பெபின்கா சூறாவளி – சீனாவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து

கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பெபின்கா சூறாவளி மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், மோசமான வானிலை...