follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகடவுச்சீட்டு வழக்கு : தீர்ப்பு இன்று

கடவுச்சீட்டு வழக்கு : தீர்ப்பு இன்று

Published on

போலியான தகவல்களை முன்வைத்து முறையற்ற விதத்தில் இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.

கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்ட இந்த வழக்கு இன்று தீர்ப்பினை அறிவிப்பதற்காக விசாரணைக்கு வரவுள்ளது.

பொய்யான தகவல்களை முன்வைத்து முறையற்ற விதத்தில் இராஜதந்திர கடவுச்சீட்டினை பெற்றுக்கொண்டதன் ஊடாக குடிவரவு மற்றும் குடியகழ்வு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமொன்றினை புரிந்துள்ளதாக குற்றஞ்சுமத்தி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சஷி வீரவன்சவிற்கு எதிரான இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...