follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுஅரிசி ஆலைகளை சுற்றிவளைத்த நுகர்வோர் அதிகார சபை

அரிசி ஆலைகளை சுற்றிவளைத்த நுகர்வோர் அதிகார சபை

Published on

இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியுடன் சிவப்பு அரிசியை கலந்து சிவப்பு, பச்சை அரிசியாக சந்தைக்கு விநியோகிக்கும் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இரத்தினபுரி நுகர்வோர் சேவை அதிகாரிகளினால் அதுதொடர்பான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன.

எம்பிலிப்பிட்டிய, துன்கம மற்றும் மொரக்கெட்டிய ஆகிய பிரதேசங்களில் குறித்த அரிசி ஆலைகள் நடத்திச்செல்லப்பட்டுள்ளதுடன், அரிசி ஆலைகளை சுற்றிவளைத்த நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் அதன் உரிமையாளர்கள் இருவரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் அரிசி அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு, அதன் அறிக்கை பெறப்பட்டதன் பின்னர், மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...