follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகருக்கலைப்பு தொடர்பான சட்டம் குறித்து ஆராயத் தயார் - நீதி அமைச்சர்

கருக்கலைப்பு தொடர்பான சட்டம் குறித்து ஆராயத் தயார் – நீதி அமைச்சர்

Published on

கருக்கலைப்பு தொடர்பாக அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி பிரேரணை சமர்ப்பித்தால், அது தொடர்பாக ஆராய்ந்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளத் தயார் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று  வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஆளும் தரப்பு உறுப்பினர் சாந்த பண்டார இடையீட்டு கேள்வி ஒன்றை முன்வைத்தார்.

பலாத்காரமாக துஷ்பிரயோகத்துக்கு ஆளாகும் பெண்ணின் கருவறையில் உருவாகும் கருவை இல்லாமலாக்குவது தொடர்பாக சட்டரீதியில் பிரச்சினை இருந்து வருகின்றது என கூறினார்.

இது மிகவும் கவலைக்குரிய பிரச்சினை என்றும் இந்நிலைக்கு ஆளாகும் பெண், பல்வேறு அசெளகரியங்கள் மற்றும் சமூகத்தில் தாழ்த்தப்படும் நிலை உருவாக்குவதாகவும் சாந்த பண்டார தெரிவித்த நிலையில் இதற்கு பதில் வழங்கும் போதே நீதி அமைச்சர் அலிசப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...