follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுதொடர் துன்புறுத்தலை நிறுத்துங்கள்! – இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்திய அமெரிக்கா

தொடர் துன்புறுத்தலை நிறுத்துங்கள்! – இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்திய அமெரிக்கா

Published on

சிவில் சமூகம், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துமாறு அமெரிக்கா இலங்கையை வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் நேற்று பேசிய அமெரிக்கா, பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான இலங்கையின் முயற்சியையும் 40க்கும் மேற்பட்டவர்கள் சமீபத்தில் விடுவிக்கப்பட்டமையும் வரவேற்றுள்ளது.

இருப்பினும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்க பயங்கவராத தடைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கருத்துச் சுதந்திரம் இவற்றுள் முக்கியமானது என்றும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு தமிழ், முஸ்லிம் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் இணைந்து நிரந்தரமான அரசியல் தீர்வை முன்னெடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் நல்லிணக்கத்தை மேம்படுத்த, காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் ஆகியவை திறம்பட, சுதந்திரமாக, வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இதேவேளை அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகம் பாதுகாப்பு அமைச்சிலிருந்து வெளியேறிமை மற்றும் சில சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் ஈடுபடுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளையும் அமெரிக்கா வரவேற்றுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...