follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுஜனாதிபதி - சுதந்திரக் கட்சியினருக்கு இடையில் இன்று கலந்துரையாடல்

ஜனாதிபதி – சுதந்திரக் கட்சியினருக்கு இடையில் இன்று கலந்துரையாடல்

Published on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்னதாக முன்வைக்கப்பட்ட 15 யோசனைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதோடு அவர்களில் 2 அமைச்சர்களும் 3 இராஜாங்க அமைச்சர்களும் அடங்குகின்றனர்.

இந்தநிலையில் இன்றைய கலந்துரையாடல் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, தற்போதைக்கு அரசாங்கத்திலிருந்து விலகும் தீர்மானம் இல்லை என்று குறிப்பிட்டார்.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இருக்கின்ற சில கரிசனைக்குரிய விடயங்கள் தொடர்பாக இந்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசு நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவித்தது

ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது. நெல் சந்தைப்படுத்தல்...

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பம் [நேரலை]

இன்று (05) நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் காலை 9.30 மணிக்குத் தொடங்கின.

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கத் திட்டம்

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதே தனது இலக்கு என்று தேர்தல் ஆணையர் ஜெனரல்...